கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.
தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து பல அணுகூலங்கள் கண்ட கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான் ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர் துணைவர் அருள்முருகன்.