சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ் இருக்கும் உலகத்தில் வேறு ஒரு சிறிய கம்பெனி போட்டி போட முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். திருவிளையாடல் படத்தில் வரும் வசனமான “சபாஷ் சரியான போட்டி” என்பது போல கோழிக்கோட்டில் ஒரு சரியான போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு சிறிய டெலிவரி கம்பெனிக்கும், பெரிய ஜாம்பவான்களுக்கும் இடையே.
தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள ஆசிரியைகளை வைத்து ஆன்லைன் மூலமாக இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தி வருகிறது. இந்த பெண் ஆசிரியைகள் திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களால் வேலையை விட்டு விட்டு பின்னர் சிறிது காலம் கழித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கம்பெனியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
முன்பெல்லாம் ஒரு கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து, பல வருடங்கள் கழித்துதான் அந்த தொழிற்சாலையைத் தொடங்க முடியும். தற்போது சில வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல
பழங்கால பொருட்கள், கைவினைப்பொருட்கள் (மார்பிள்,மெட்டல், ஹாண்ட்மேட் பேப்பர், சேண்ட் ஸ்டோன்), ஓவியங்கள், மரவேலைப்பாட்டு பொருட்கள், துணி வகைகள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைக்கிறது.
ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும் என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர். உங்கள் வீட்டுக்கே வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள், அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள் வாங்கி சென்று அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள். இந்த சேவைதான் லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.
பணம் முக்கியமானது, பணம் சுதந்திரம் தருகிறது, பணம் வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. அந்த பணத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்பது போலவே, எங்கள் பணமும் எங்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்….” என எண்ணி ஏங்குபவர்களுக்காக பெங்களூரில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் “பர்ப்புள்பாத் வெல்த் மானேஜ்மென்ட் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (PurplePath Wealth Management Solutions Private Limited).
இந்தியாவில் இருக்கும் நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நிதி ஆதாரம் தான். பல சமயங்களில் வங்கிகள் கடன் கொடுக்க முன் வந்தாலும் நடைமுறை தாமதங்களால் அவை சரியான சமயத்தில் கிடைக்காமல் போய் விடுகிறது. வங்கிகளுடைய தாமதத்தால் கிடைத்த ஆர்டரை சரியான சமயத்தில் செயல்படுத்தி கொடுக்க முடியாத நிலை பல கம்பெனிகளுக்கு இருக்கிறது. சில சமயங்களில் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால்
2000 வருஷத்தில் இந்தியாவில் நுழைந்த ஈ-காமர்ஸ் துறை இன்றைய தினத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் மொபைல் உபயோகம், இந்தியாவின் மக்கள் தொகை. 2000 ம் வருஷத்தில் பாசி.காம் (baazee.com) என்ற வாங்குபவர், விற்பவர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட போது பலர் இணையம் மூலமாக யாராவது பொருட்கள் வாங்குவார்களா? என்ற பெரிய கேள்வியை எழுப்பினார்கள். பின்னர் 2004ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஈபே நிறுவனம் 55 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூபாய் 385 கோடி) கொடுத்து வாங்கி தன்னகப்படுத்திக் கொண்டது.
2007ம் வருடம் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்த இரண்டு இளைஞர்கள் சச்சின் பன்சால், சஞ்சய் பன்சால் அவர்களுடைய அமேசான் அனுபவத்தை வைத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தார்கள். அன்றைய தினத்தில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியாகும். ஆனால் இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் மூலம் விற்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. கடந்த வருடம் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கு 16 பில்லியன் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 102,000 கோடி ரூபாய்களுக்கு) விற்று இருக்கிறது.
2007க்கு பிறகு பல வெற்றிகரமான டிராவல்ஸ், கல்யாண புரோகர், வாங்குபவர் விற்பவர் இணையதளங்கள் ஆகியவை வந்து இன்றைய தினமும் அவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஐஆர்சிடிசி, மேக்மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப், ஓயோ, பாலிசி பஜார், பாங்க் பஜார், ரெண்ட்மோஜோ போன்ற நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்தன.
இந்த ஈ காமர்ஸ் துறை 2021ம் வருடம் 5.88 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ரீடெய்ல் துறையில் வர்த்தகம் 84 லட்சம் கோடிகளுக்கு நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துறையின் அபரிதமான வளர்ச்சியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
கோடிக்கணக்கானவர்களின் கையில் மொபைல் இருப்பதால், உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தால் பல லட்சங்களுக்கு ஏன் கோடிகளுக்கு நீங்களும் அதிபராகலாம்.
நாம் தெருவில் நடந்து செல்லும் போது அல்லது சில பொது இடங்களில் பெரிய அளவு குப்பைகள் கொட்டி இருக்கும் போது, கழிவுகள் தங்கியிருக்கும் போது, குழாயடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் போது, நம் இந்தியா இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்று பலருக்கு தோன்றும் . ஆனால் அந்த சிறப்பான இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து, அதை செய்வதற்கு நேரம் பலருக்கு இருப்பதில்லை. இதனால் எந்த முன்னேற்றமும் பெரிதாக இருப்பதில்லை.
பெட்டர் இந்தியா என்ற இணையதள கம்பெனி 2015 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த இணையதளம் மூலமாக நாட்டின் சுற்றுப் புற சூழ்நிலையை கெடுக்காமல் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அது சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் பொருட்களாகவும் இருக்கிறது, ஆர்கானிக் பொருட்களாகவும் இருக்கிறது, கிராமப்புற கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களாவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில கைவினைஞர்களும் இந்த இணையதளத்தின் மூலம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். உதாரணம் மூங்கில் இழைகள் மூலம் தயாரிக்கப்பட்ட கால் சட்டை, கையால் நெய்யப்பட்ட துணிகள் போன்றவைகளை குறிப்பிடலாம்.
இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.
மேலும், நாட்டை முன்னேற்றுவதற்கு மக்கள் செய்யும் சிறப்பான சேவைகளையும் பதிவிடுகிறார்கள். அந்த கட்டுரைகள் பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அதன் மூலம் விழுப்புணர்வை மக்களிடையே தூண்டுகிறது.
நீங்கள் தயாரிக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகள் மாசு அடையாத பொருட்களையும் இவர்கள் மூலமாக விற்பனை செய்யலாம்.
இவர்கள் மூலம் நாம் பொருட்கள் வாங்கும் போது ஒரு கைவினை கலைஞரை ஊக்குவிக்கிறோம், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தவில்லை என்ற மனநிறைவும் நமக்கு ஏற்படுகிறது.www.thebetterindia.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள் வாங்குங்கள் பரவசமடையுங்கள்,.