உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலில், பாட்டிலில் அடைக்கப்பட்ட ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட குளிர்பானங்கள் கணிசமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

ரசாயனப் பொருட்கள் அடங்கிய குளிர்பானத்துக்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பரிய பானங்களை ரசாயனக் கலப்பில்லாமல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் ஹரிகிருஷ்ணன்.

இதன் முதல்படியாக, நண்பர்களுடன் இணைந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட  இளநீர் பாயாசம், இளநீர் ஐஸ்கிரீம், திணைப் பாயாசம், வரகுப் பாயாசம், மூங்கில் அரிசி பாயாசம் போன்றவற்றை தயாரித்து வருகிறார்.

திருமணம் உள்ளிட்ட விழாக்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த  இளநீர் பாயாசத்தை, பாட்டிலில் அடைத்து கடைகளுக்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.

இந்த இளநீர் பாயாசம் 100 சதவீதம் இயற்கையான பானம். இதில் எந்தவிதமான ரசாயனக் கலப்புகளோ, நிறமோ சேர்க்கப்படுவதில்லை.

தற்போது சுதேசி இதழில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே, ஊட்டச்சத்து உணவுகள்  தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இது தவிர, “திணைப் பாயாசம்” மற்றும் “கோலிசோடா.இன்” (kolisoda.in) என்ற பெயரில் சென்னையில் பல இடங்களில் சிறிய அளவில் உணவு விடுதிகளையும்  தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். காரணம், இவருடைய தயாரிப்புகளுக்கு மக்களிடையே  கிடைத்திருக்கும் வரவேற்பு.  

அவரது பேட்டியில்,  இந்த வித்தியாசமான ஐடியா வந்ததன் காரணத்தை விளக்கினார். 

“…சுவையோடு ஆரோக்கியமும் சேருகின்ற ஒன்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான், இந்தத் தொழிலில் என்னை கொண்டு வந்தது” என்றார்.

நாவுக்கு சுவையாகவும், அதே நேரத்தில் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று யோசித்ததன் விளைவு தான் இளநீர் பாயாசம், இளநீர் ஐஸ்கிரீம் மற்றும் திணைப் பாயாசம். இதில் தயாரிக்கப்படும் பாயாசத்தை குடிப்பதால், குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். அஜீரணக் கோளாறு  சரியாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

இளநீர் பாயாசத்தில் ரசாயன கலப்பு  இல்லாததால், குளிர்சாதனப் பெட்டியிலேயே வைத்திருக்க வேண்டும். 15 நாட்களுகு்கு கெடாமல் இருக்கும். இளநீர் ஐஸ்கிரீமை மண்பானையில் கொடுப்பது இவர்களின் தனிச் சிறப்பு. 

வாடிக்கையாளர்களின் வசதிக்காக திணை பாயாசம், வரகு பாயாசம், மூங்கில் அரிசி பாயாசம் போன்ற ரெடி மிக்ஸ் வகைகளையும் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மக்கள் எப்போதும் மாற்றங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான மாற்றம் வரும் போது, அதை அப்படியே ஆதரிக்கிறார்கள்.

சென்னையில் உள்ள புகழ் பெற்ற சங்கிலி தொடர் பிராண்டட் கடைகளிலும், தொடர்  உணவகங்களிலும் இவர்களின் இளநீர் பாயாசம் பிரசித்தம். இது தவிர, ஐடி கம்பெனிகளில் உள்ள உணவு விடுதிகளிலும், பல்வேறு சிறிய உணவு விடுதிகளுக்கும், திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கும்  சப்ளை செய்து வருகிறார்கள்.

பெரிய விற்பனை அங்காடிகளிலும், தொடர் சங்கிலி பிராண்டட் கடைகளிலும் கொடுக்கும் போது, ஏழு நாளைக்குள் திரும்ப எடுத்து விடுவோம் என்று உத்தரவாதம் கொடுப்போம்.ஆனால்  இரண்டு, மூன்று  நாட்களுக்கு   மேல் பொருட்கள் அங்கு தங்குவதில்லை. 

“…இயற்கையான பொருட்களில் எந்த ரசாயனமும் கலக்காமல் மக்களுக்கு நல்ல உணவு வகைகளை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்காலத் திட்டம்” என கூறி முடித்தார் ஹரி கிருஷ்ணன்.  

தொடர்புக்கு ஹரி கிருஷ்ணன் 9176476414, 99402 22832, 044-4846 3202,   ssahari2019@gmail.com

Spread the lovely business news