நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் இந்த தொடர் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நிறுவனம், ஆண்டுதோறும் 70 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள் ஓம் பிரகாஷ் முஞ்சல் குறித்து பிரியா குமார் சுவைபட தந்திருக்கிறார்.
நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.
உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இப்புத்தகம் 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகள் தொடங்கிய கதைதான். மிகவும் இயல்பான நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சங்கடங்களை விவரிக்கிறது.
மாறுபட்ட பின்னணியை கொண்ட ஐந்து வெற்றி பெற்ற குஜராத்தி தொழிலதிபர்களைப் பற்றிய புத்தகம்தான் இது. எழுத்தாளர் ஷோபா பாண்ட்ரே முதலில் மராத்தியில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . குஜ்ஜு என்றழைக்கப்படும் குஜராத்திய வணிகர்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தை கொண்டாடும் இந்த புத்தகம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும்.
இந்திய நாகரீகத்தை முன்னேற்றுவதிலும் , இந்தியாவை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும் மார்வாரி நிறுவனங்களால் ஆற்றப்பட்ட தெளிவான ஆற்றல் மிக்க சிறப்பான பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூகோள ரீதியாக வட மாநிலமான கிழக்கு ராஜஸ்தானில் “மார்வார்” என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்வாரிகள். 19ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம், வங்காளம் ,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா என இவர்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். நம்மூரில் செல்லமாக
இப்போது எங்கு சென்றாலும் உங்களின் கையடக்கமான மொபைல் போனில்பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஓரிடத்தில் பார்க்க முடியும் படிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு போறோம்ன்னா நாம் எடுத்து வைக்கிற சாமான்களுடன் நான்கு புத்தகங்களும் கூடவே இருக்கும். புத்தகங்கள் துணை இல்லாமல் பலர் வெளியூர் செல்லவே மாட்டார்கள் தற்போது பலருக்கு படிக்கும் பழக்கமே மறந்துவிட்டது. மேலும் புத்தகங்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல வருடங்களுக்கு முன்பு கிண்டில் ரீடர் வந்தது. கையடக்க பதிப்பு போல, கையடக்க ரீடர்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டு உனக்கு வேண்டியவற்றை எடுத்து படி என்று ஆவலைத் தூண்டுகிறது. இது போல பல ரீடர்கள் வந்துவிட்டாலும், தற்போது சந்தைக்கு புதிதாக வந்திருப்பது ஏர்டெல் புக்ஸ் (Airtel Books). இதில் என்ன புதிய அம்சம் என்றால், இதை தனியாக கிண்டில்ரீடர் போல எடுத்துச் செல்ல வேண்டாம். உங்களிடம் தற்போது இருக்கும் மொபைலில் இந்த செயலியை நிறுவிக் கொள்ளலாம். இதன் மூலம் பல ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் புத்தகம் படிப்பதற்க்கும் டவுன்லோட் செய்வதற்க்கும் சிறிது பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். பயணத்தில் தனிமை என்ற பயம் இனி வேண்டாம். உங்களுடன் புத்தகங்களும் பயணிக்கிறது என்பது ஒரு இனிமையான அனுபவம். புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே ஒரு லட்சம் டவுண்லோட் கள் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
ப்ளே ஸ்டோரில் சென்று Airtel Books யை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.