பீகாரை சேர்ந்த ‘சாப்த் கிருஷி சயின்டிபிக்’ என்ற கம்பெனி, விவசாயிகளின் விளைபொருட்களை, குறிப்பாக, காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறது. இது, ‘சப்ஜி கோதி’ என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஒரு தீர்வு.
தோட்டங்களில் விளையும் காய், கனி ஆகியவற்றை 10 முதல் 40 நாட்கள் வரையில் கெடாமல் சேமிக்க சப்ஜி கோதி பயன்படுகிறது. இதை இயக்க, தினமும் ஒரு லிட்டர் தண்ணீரும் 20 வாட் மின்சாரமும் போதும். 200 கிலோ காய், கனியை சேமிக்க சுமார் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். பழங்கள், காய்கறிகளை கெடாமல்  பாதுகாக்க குளிர்சாதனமோ ரசாயனமோ தேவையில்லை. காய், கனிகள் அழுகி வீணாகும் பிரச்னைக்கு ‘சப்ஜி கோதி’ தீர்வு கண்டுள்ளது. விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த மலிவு தொழில்நுட்பத்தை நேரடியாக வழங்குவதன் மூலம் கழிவுகளை குறைக்கவும், ‘சப்ஜி கோதி’ பெரிதும் உதவுகிறது.

இ–மெயில் முகவரி: saptkrishi@gmail.com

மீன் உற்பத்தி, ஏற்றுமதியால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில், உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதிக புரோட்டின் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர். 1960ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, உலக அளவில், மீன் உணவு சாப்பிடுவது இப்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. இந்தியாவை சுற்றியுள்ள, 7,500 கி.மீ., கடற்கரைகள், மீன் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.

Spread the lovely business news